Wednesday, March 11, 2009

நார்வேயின் பிரபல வங்கி மும்பையில் பிரதிநிதி அலுவலகம் திறந்தது

நார்வேயை சேர்ந்த பிரபல வங்கி ' டெப் நார் ' மும்பையில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறது. இது தான் அந்த வங்கிக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே பிரதிநிதி அலுவலகம். ஆசியாவிலேயே கூட அதற்கு இருக்கும் இரண்டாவது அலுவலகம் இதுதான். ஆசியாவில் இன்னொரு அலுவலகம் சிங்கப்பூரில் இருக்கிறது.தற்சமயம் அதற்கு 18 நாடுகளில் அலுவலகங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவிலான அதன் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக மும்பையில் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாக ' டெப் நோர் ' குரூப்பின் தலைமை அதிகாரி ரூனே பெர்கே தெரிவித்தார். இந்திய ஷிப்பிங், எனர்ஜி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் இருக்கும் நார்வேயை சேர்ந்த கம்பெனிகளுக்கும் மும்பை அலுவலகம் சேவை செய்யும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இந்தியாவை சேர்ந்த ஷிப்பிங், ஆஃப்ஷோர், லாஜிஸ்டிக், மற்றும் எனர்ஜி துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கு எங்களுக்கு அலுவலகம் இல்லாமல் இருந்ததால் அவர்களுக்கு சேவை செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன. அதுனால்தான் இங்கு அலுவலகம் திறந்தோம். மற்ற வெளிநாட்டு வங்கிகளை விட, அதிகமான இந்திய ஷிப்பிங் கம்பெனிகளுக்கு நாங்கள்தான் சேவை அளித்து வருகிறோம். இந்தியாவில் இருக்கும் பெரிய ஷிப்பிங் கம்பெனிகளில் 5 முதல் 8 கம்பெனிகள் வரை எங்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்றார் ரூனே.
நன்றி : தினமலர்


No comments: