Thursday, March 5, 2009

டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு ' தங்க மயில் ' விருது

உலகின் நான்காவது மிகப்பெரிய ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல், கோல்டன் பீகாக் விருது பெற்றுள்ளது. சமுதாய பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் நிறுவனம் என்ற தகுதி அடிப்படையில், டாடா ஸ்டீலுக்கு 2009ம் வருடத்திற்கான ' கோல்டன் பீகாக் ' விருது வழங்கப்படுகிறது. முன்னாள ஸ்வீடன் பிரதமர் ஓலா உல்ஸ்டன், முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பகவதி ஆகியோரை துணை தலைவர்களாக கொண்ட ' கோல்டன் பீகாக் ' நீதிபதிகள் குழு, டாடா ஸ்டீலை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறது. போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள விலாமவுரா நகரில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. டாடா ஸ்டீல் சார்பாக போர்ச்சுக்கல்லில் இருக்கும் கோரஸ் இன்டர்நேஷனல் நிர்வாகி கிலாடியா ஸ்டீவ்ஸ் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
நன்றி : தினமலர்


No comments: