Monday, February 9, 2009

ஏற்றத்தில் முடிந்த பங்கு சந்தை

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்கு சந்தை ஏற்றத்தில் முடிந்திருக்கிறது. நிப்டி 2,900 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. கடைசி அரை மணி நேரத்தில் சென்செக்ஸூம் 9,600 புள்ளிகளை நெருங்கி வந்து விட்டது. ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், மெட்டல், பவர், கேப்பிடல் குட்ஸ், மற்றும் டெலிகாம் பங்குகள் பெருமளவில் இன்று வாங்கப்பட்டதால் குறியீட்டு எண் உயர்ந்தது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 283.03 புள்ளிகள் ( 3.04 சதவீதம் ) உயர்ந்து 9,583.89 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 76.80 புள்ளிகள் ( 2.7 சதவீதம் ) உயர்ந்து 2,919.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: