Monday, February 9, 2009

1,650 தற்காலிக பணியாளர்களை வேலையில் சேர்த்தது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாக சேர்த்திருக்கிறது. ஜாம்ஷெட்பூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் இவர்கள் வேலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். டாடாவின் ஹெவி டூட்டி கமர்சியல் வாகனங்கள் ஜாம்ஷெட்பூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்படுகிறது. கடந்த வருடத்தில் அதன் விற்பனை கடுமையாக சரிந்து போனதை அடுத்து, அங்கு மூன்று தடவைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அங்கு பணியாற்றி வந்த 700 க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். ஜனவரி மாதத்தில் அதன் வாகன விற்பனை நல்லபடியாக இருந்ததால் உற்பத்தி வழக்கம் போல் நடக்க துவங்கி விட்டது. எனவே பிப்ரவரி துவக்கத்தில் இருந்து நாங்கள் இதுவரை 1,650 பேரை தற்காலிய பணியாளர்களாக ஏடுத்திருக்கிறோம் என்றார் ஒரு டாடா மோட்டார்ஸ் அதிகாரி. இப்போது உற்பத்தி அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்று அந்த அதிகாரியிடம் கேட்டபோது, உற்பத்தி வழக்கம்போல் நடக்க துவங்கி விட்டது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: