Friday, October 31, 2008

சூடாகிறது என்று புகார் : ஒரு லட்சம் கம்ப்யூட்டர் பேட்டரிகளை திரும்ப பெறுகிறது சோனி

ஜப்பானின் சோனி கார்பரேஷன் தயாரித்து கொடுத்து, லேப்டாப்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் பேட்டரிகள், சூடாகிறது என்று வந்த புகாரினால் திரும்ப பெறப்படுகிறது. சோனி தயாரிப்பு பேட்டரிகள் சூடாகிறது என்றும் அதிலிருந்து புகை வருகிறது என்றும் வந்த சுமார் 40 புகார்களால், அந்த பேட்டரிகளை சோனி நிறுவனம் திரும்ப வாங்குகிறது. இதனால் கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டு விட்டது என்று 21 பேரும், சூடான பேட்டரியால் தோல் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறது என்று நான்கு பேரும் இதுவரை புகார் அளித்திருக்கிறார்கள். ஹேலட்-பேக்கார்ட், டோஷிபா, டெல் போன்ற முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள், சோனி பேட்டரியை அவர்களது லேப்டாப்களில் பொருத்தியிருந்தார்கள். அக்டோபர் 2004 க்கும் ஜூன் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள்தான் இந்த புகாருக்கு உள்ளாகி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரி பிரச்னையில் சோனியின் வையோ லேப்டாப்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் 32,000 சோனி பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. இதில் பெருமாலானது ஹேலட்-பேக்கார்ட்டில் பொருத்தப்பட்டிருந்தது. சோனி பேட்டரிகள் பொருத்தப்பட்ட லேப்-டாப்களை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். டேஷிபாவின் 14,400 லேப்-டாப்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் யுகோ சுகஹரா தெரிவித்தார். 2006 ம் ஆண்டிலும் ஒரு தடவை சோனியின் ஒரு கோடி லேப்-டாப் பேட்டரிகள் திரும்ப பெறப்பட்டிருக்கிறது. அப்போதும் அது சூடாகிறது என்றுதான் புகார் வந்தது.
நன்றி : தினமலர்


No comments: