Friday, August 8, 2008

பெண்களுக்காக தனி வங்கி : இந்தியன் வங்கி துவங்குகிறது

பெண்களுக்காக தனி வங்கி கிளை ஒன்றை இந்தியன் வங்கி துவங்குகிறது. பெண்கள் சுயஉதவி குழுவினரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவர்களது அக்கவுட்டை வைத்துக்கொள்ள வசதியாக, அதன் மூலம் விரைவான சேவையை பெற மைக்ரோ ஸ்டேட் பிராஞ்ச் என்ற பெயரில் வங்கி கிளை ஒன்றை இந்தியன் வங்கி துவங்குகிறது. பெண்கள் சுய உதவி குழுவினருக்காக பிரத்யேகமாக இந்த வங்கி துவங்கப்பட்டாலும், அதில் மற்ற பெண்களும் கணக்கு வைத்துக்கொள்ளலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்திருக்கிறது. தர்மபுரியில் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இந்த புதிய மைக்ரோ ஸ்டேட் பிராஞ்ச் துவங்கப்படும் என்று இந்தியன் வங்கியின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் மற்றும் தர்மபுரி சர்க்கிளின் தலைவர் முத்தப்பன் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 6,500 பெண்கள் சுய உதவி குழுக்கள் இயங்குகின்றன என்றும், அவர்கள் மூலம் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக ரூ.90 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முத்தப்பன் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

No comments: