Friday, August 8, 2008

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன் ராஜினாமா

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர்.சி.ரங்கராஜன் ( 76 ) பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜ்யசபா மெம்பராக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் அமைச்சராவார் என்று சொல்லப்படுகிறது. இதற்காகத்தான் ராஜினாமா செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அதே பொருளாதார கவுன்சிலில் மெம்பராக இருக்கும் பொருளாதார நிபுணர் சுரேஷ் டெண்டுல்கர் இவருக்கு பதிலாக தலைவராக நியமிக்கப்படுகிறார் என்கிறார்கள். அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஹெச்.டி.பட்டம் பெற்றிருக்கும் சுரேஷ் டெண்டுல்கர், 2005 ஜனவரியில் இருந்து பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலில் பகுதி நேர மெம்பராக இருக்கிறார். இவர் 2006 ஜூலையில் இருந்து தேசிய புள்ளியியல் கமிஷனிலும் பகுதி நேர சேர்மனாக இருக்கிறார். இது தவிர 2006 ஜூனில் இருந்து ரிசர்வ் வங்கியின் டைரக்டர்கள் போர்டிலும் இருக்கிறார்.டாக்டர் சி.ரங்கராஜனும் ஒரு சிறந்த பொரளாதார நிபுணர். ஆந்திராவின் கவர்னராக இருந்தவர். 12 வது நிதி கமிஷனில் சேர்மனாக பணியாற்றியவர். கடந்த மே மாதத்தில் காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே இறந்து விட்டதால் ஒரு ராஜ்ய சபா மெம்பர் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை ரங்கராஜன் நிரப்புவார் என்று சொல்லப்படுகிறது. அவர் ராஜ்ய சபா மெம்பராக்கப்பட்டு, கேபினட் அமைச்சர் பதவியும் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அல்லது முக்கிய பொருளாதார துறை பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: