Friday, August 8, 2008

அதிக மாற்றமின்றி முடிந்த இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று அதிக மாற்றமின்றி முடிந்துள்ளது. காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து குறைந்த நிலையிலேயே இருந்த சென்செக்ஸ், மதியம் 2 மணிக்கு மேல்தான் கூடியது. அதுவும் சிறிய அளவில்தான். மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 50.57 புள்ளிகள் மட்டும் ( 0.33 சதவீதம் ) உயர்ந்து 15,167.82 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 5.65 புள்ளிகள் மட்டும் ( 0.12 சதவீதம் ) உயர்ந்து 4,529.50 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக காணப்பட்டது. கேப்பிட்டல் குட்ஸ், மெட்டல்,பேங்கிங், பவர் நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. டெக்னாலஜி, ரியல் எஸ்டேட் பங்குகள் விற்கப்பட்டன.

நன்றி : தினமலர்


No comments: