Tuesday, January 19, 2010

எலுமிச்ச‌ை சுவையில் புதிய குளிர்பானம்: கோகோகோலா அறிமுகம்

எலுமிச்சை சுவை கொண்ட புதிய குளிர்பானத்தை கோகோ கோலா நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த குளிர்பானத்திற்கு மினிட் மெய்ட் நிம்பு என பெயரிடப் பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, எலுமிச்சை சாறு அடிப்படையிலான சுவை கொண்ட குளிர்பானமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் எலுமிச்சை போன்று புத்துணர்வு அனுபவத்தை அளிக்கும் என்று‌ தெரிவித்தார்.
400 மில்லி மற்றும் 1 லிட்டர் பெட் பாட்டில்களில் இவை விற்பனைக்கு வந்துள்ளன. தமிழகம் முழுவதும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். விலை முறையே ரூ. 15 மற்றும் ரூ. 40.

புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட குளிர்பானம் குறித்து, சந்தைப் பிரிவுத் துணைத் தலைவர் ரிக்கார்டோ ஃபோர்ட் கூறும்போது, தமிழகத்தில் திருநெல்வேலியில் கங்கை கொண்டான் ஆலை மற்றும் ஆந்திரத்தில் சித்தூரில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த குளிர்பானத்தில் எவ்வித பதப்படுத்திகள் மற்றும் வண்ணச் சேர்ப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. 'முற்றிலும் வீட்டு சுவை' என்ற வாசகத்துடன் இதை நாடு முழுவதும் பிரபலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: