Friday, January 8, 2010

கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை: மித்தல் திட்டம்

கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை அமைக்க தொழிலதிபர் லட்சுமி மித்தல் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். உலகிலேயே மிக அதிக அளவிலான இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஆர்சிலார் மித்தல் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு பல்வேறு மாநிலங்களை பரிசீலித்து வருகிறது. இரும்புத் தாது அதிகம் கிடைக்கும் பகுதியில் தொழிற்சாலையை தொடங்க இந்நிறுவனம் ‌திட்டமிட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநிலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இங்கு தொடங்க உத்தேசித்துள்ள ஆலை ஆண்டுக்கு 60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். உருக்கு ஆலையுடன் 750 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் தேவைப் படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: