Friday, December 11, 2009

தொலைக்​காட்​சி​யில் தொலைந்​த​வர்​கள்

பொழு​து​போக்கை மைய​மாக வைத்​துக் கண்​டு​பி​டிக்​கப்​பட்ட தொலைக்​காட்சி,​​ இன்று நம் அனை​வ​ரின் வாழ்​வி​லும் தொலைந்து போன காட்​சி​க​ளைத்​தான் காண்​பித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​ தொலைக்​காட்​சி​யைப் பார்த்து வாழ்க்​கை​யைத் தொலைத்​த​வர்​க​ளும் உண்டு.​

​ ​ ​ தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளில் வட இந்​தி​யர்​களை விட தென்​னிந்​தி​யர்​கள் அதிக கவ​னம் செலுத்​து​வ​தா​க​வும்,​​ தமி​ழ​கத்​தில் சரா​ச​ரி​யாக நாள் ஒன்​றுக்கு 6.5 எபி​சோ​டு​க​ளைப் பார்ப்​ப​தா​க​வும்,​​ அதி​லும் குறிப்​பிட்ட 3 சானல்​களை 54 சத​வீ​தம் பேர் பார்ப்​ப​தா​க​வும் தனி​யார் நிறு​வ​னம் ஒன்​றின் புள்​ளி​வி​வ​ரம் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ கேர​ளத்​தில் இது 4 எபி​சோ​டு​க​ளாக உள்​ள​தா​க​வும்,​​ பிற்​பக​லில் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​க​ளைப் பார்ப்​ப​தில் கேர​ளம்,​​ கர்​நா​ட​கத்தை விட தமி​ழ​க​மும்,​​ ஆந்​தி​ர​மும் தான் முன்​ன​ணி​யில் உள்​ள​தா​க​வும்,​​ அதி​லும் முன்​ன​ணி​யில் இருப்​ப​வர்​கள் பெண்​கள் என்​றும் அந்​தப் புள்​ளி​வி​வ​ரம் மேலும் தெரி​விக்​கி​றது.​

​ ​ ​ தொலைக்​காட்​சி​க​ளால் நம்​ம​வர்​கள் அடைந்த பயன்​தான் என்ன?​ பக்​கத்து வீடு​க​ளு​ட​னான தொடர்​பும்,​​ சச்​ச​ர​வு​க​ளும் குறைந்​துள்​ளது.​ கொலை​யும்,​​ கொள்​ளை​க​ளும்,​​ வீடு​க​ளில் பிரச்​னை​க​ளும் அதி​க​ரித்​துள்​ளன என்​பது தான் பதில்.​ ​

​ ​ பெண்​க​ளை​யும்,​​ தொடர்​க​ளை​யும் மைய​மாக வைத்தே இன்​றைய டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்டு இயங்கி வரு​கின்​றன.​ தொலைக்​காட்​சி​க​ளில் ஒளி​ப​ரப்​பா​கும் பெரும்​பா​லான நிகழ்ச்​சி​கள் கொலைக்​காட்​சி​க​ளா​கத்​தான் இருக்​கின்​றன என்​பது வருத்​தப்​பட வேண்​டிய ஒன்று.​

​ ​ நல்ல நிகழ்ச்​சி​களை வழங்​கும் டிவி சேனல்​க​ளுக்கு நம்​மி​டையே பெரிய அள​வில் வர​வேற்​பில்லை என்​ப​தும்,​​ இந்த தொலைக்​காட்சி தொடர்​க​ளின் ஆதிக்​கத்​துக்​குக் கார​ணம்.​ ​

​ ​ ​ பெண்​களை மட்​டு​மன்றி குழந்​தை​க​ளை​யும் கவ​ரக்​கூ​டிய வகை​யில் ​ ஏரா​ள​மான டிவி சேனல்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ அதில் ஒளி​ப​ரப்​பா​கும் நிகழ்ச்​சி​கள் பிஞ்​சுக் குழந்​தை​க​ளின் மன​தில் நஞ்சை விதைப்​ப​தா​கத்​தான் உள்​ளன.​ ​

​ ​ சிறு​வ​ய​தி​லேயே டிவிக்கு அடி​மை​யா​கும் குழந்​தை​கள் கண்​பார்​வைக் குறை​பா​டு​க​ளுக்கு உள்​ளா​வ​தா​க​வும்,​​ மன​ரீ​தி​யான பாதிப்​புக்​குள்​ளா​வ​தா​க​வும் ஆய்​வு​கள் தெரி​விக்​கின்​றன.​

​ ​ தீபா​வளி,​​ பொங்​கல் போன்ற விழாக்​களை வீதி​யில் கொண்​டா​டிய காலம் போய் இன்று டிவி​யில் பார்த்து ரசிக்​கிற காலத்​தில் இருக்​கி​றோம்.​ பண்​டி​கைக் காலங்​க​ளில் கோயில்​க​ளுக்​குச் செல்​வது,​​ உற​வி​னர்​க​ளின் வீடு​க​ளுக்​குச் சென்று வரு​வது போன்ற பழக்க வழக்​கங்​கள் எல்​லாம் இன்று நம்​மி​டம் இருந்து மறைந்து போய்​விட்​டது ​(மறந்து போய்​விட்​டது)​ என்றே சொல்​ல​லாம்.​ ​

​ ​ ​ ஓடி விளை​யாடு பாப்பா என்று சொன்ன கவி​ஞர் பாரதி வாழ்ந்த நாட்​டில்,​​ இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழ​கி​விட்​டோம்.​

​ ​ ​ டிவி சேனல்​கள்,​​ இணை​யத்​தின் வரு​கை​யால் இன்​றைக்கு மைதா​னங்​க​ளில் விளை​யா​டு​வோ​ரின் எண்​ணிக்​கை​யும்,​​ தெரு​மு​னை​க​ளில் கதை பேசு​ப​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யும் கணி​ச​மா​கக் குறைந்​துள்​ளது.​ ​

​ ​ ​ தொலைக்​காட்​சிக்கு அடுத்​த​ப​டி​யாக இன்று ஏரா​ள​மா​னோரை தன்​னு​டைய கட்​டுக்​குள் வைத்​தி​ருப்​பது இணை​ய​த​ளம்.​ தொலைக்​காட்​சி​யின் பரி​ணாம வளர்ச்சி என்று சொல்​லக்​கூ​டிய அள​வுக்கு வளர்ச்​சி​யை​யும்,​​ வர​வேற்​பை​யும் பெற்​றுள்​ளது இணை​ய​த​ளம்.​ ​

​ ​ அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்​க​ளைப் போன்று தோன்​றி​யி​ருக்​கும் தெரு​முனை பிர​வு​ஸிங் சென்​டர்​கள்.​ ​ ​

​ ​ ​ தொலைக்​காட்​சி​யால் ​ சமூ​கத்​தில் மாற்​றங்​க​ளும்,​​ இணை​யத்​தால் வளர்ச்​சி​யும் ஏற்​பட்​டுள்​ளன என்​பதை ஒத்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில் அத​னால் ஏற்​பட்​டுள்ள சமூ​கச் சீர​ழி​வு​க​ளை​யும் எண்​ணிப்​பார்க்க வேண்​டும்.​ ​

​ ​ ​ மணிக்​க​ணக்​காக டிவி மற்​றும் இணை​ய​த​ளங்​க​ளின் முன் அம​ரும் பெரும்​பா​லன இளை​ஞர்​கள் மன​அ​ழுத்​தத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தவ​றான வழி​க​ளில் செல்​வ​தா​க​வும்,​​ சிலர் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வ​தா​க​வும் மருத்​து​வர்​கள் கூறு​கின்​ற​னர்.​ ​

​ ​ ​ சுற்​றத்​தோ​டும்,​​ உற​வு​க​ளோ​டும் வாழ்ந்​த​வர்​கள் அக்​கால மனி​தர்​கள்.​ தொலைக்​காட்​சி​யோ​டும்,​​ இணை​யத்​தோ​டும் வாழ்ந்து கொண்​டி​ருக்​கி​ற​வர்​கள் இக்​கால மனி​தர்​கள்.​

​ ​ ​ இன்​றைய இளை​ஞர்​கள் விளை​யாட்​டுப் போட்​டி​க​ளில் பங்​கேற்​ப​தை​விட,​​ அதைப் பார்த்து ரசிப்​ப​தைத்​தான் விரும்​பு​கின்​ற​னர்.​ இதன்​வி​ளைவு கிரிக்​கெட் தவிர மற்ற விளை​யாட்​டு​க​ளில் மெச்​சு​கின்ற அள​வுக்கு இந்​தி​யர் யாரும் இல்லை.​ ​ இந்​தி​யா​வின் தேசிய விளை​யாட்​டான ஹாக்​கி​யின் நிலையோ மிக​வும் பரி​தா​பத்​துக்​கு​ரி​யது.​

​ ​ ​ உலக வரை​ப​டத்​தில் ஒளிந்​தி​ருக்​கும் நாடு​கள் கூட ஒலிம்​பிக்​கில் கோப்​பையை வென்ற நாடு​க​ளின் பட்​டிய​லில் ஒளிர்​கி​றது.​ ஆனால் உல​கின் இரண்​டா​வது பெரிய மக்​கள் தொகையை கொண்ட இந்​தி​யா​வின் நிலையோ வெற்​றிப்​பட்​டிய​லில் தேடும் நிலை​யில் தான் இருக்​கி​றது.​
கட்டுரையாளர் : ஏ.வி. பெரு​மாள்
நன்றி : தினமணி

No comments: