Friday, December 11, 2009

'டிஷ் டிவி'யின் புதிய அறிமுகம்

இந்தியாவின் நம்பர் 1, 'டைரக்ட் டூ ஹோம்' நிறுவனமான, 'டிஷ் டிவி,' தனது தென்மாநில வாடிக்கையாளர்களுக்காக, பிரத்தியேகமான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த, 1,690 ரூபாய் மதிப்புள்ள, 'ஹாப்பி ஹோம் சில்வர் ப்ளஸ் பேக்' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த சிறந்த பொழுதுபோக்காக, இந்த பேக்கை உருவாக்கியுள்ளனர். தென்மாநில மொழிகள், விளையாட்டுகள், வர்த்தகம், செய்திகள், திரைப்படங்கள், இடைவேளை இல்லாத திரைப்படம் என, முழுமையான பொழுதுபோக்கு பேக்காக இது திகழ்கிறது. 'டிஷ் டிவி' மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், டிஜிட்டல் தொலைக்காட்சியை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் எளிமையாக்கியுள்ளது. மேலும், அனைத்து சேனல்களையும் பார்க்க விரும்பும், 'ஹை எண்ட் பிளாட்டினம்' சந்தாதாரர்களுக்கு, 1,990 ரூபாய் மதிப்புள்ள செட்-டாப் பாக்சை இலவசமாக்கி உள்ளது.இந்த குறைந்த காலச் சலுகைகள், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில், 2010 ஜன., 15ம் தேதி வரை கிடைக்கும். 'டிஷ் டிவி' துணைத் தலைவர் அஞ்சலி மல்ஹோத்ரா கூறுகையில், ''வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் வகையில், அதிகளவு எண்ணிக்கையில் உள்ள சேனல்களை, மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில், எங்கள் 'டிஷ் டிவி' வழங்குவதன் மூலம், இனி டி.டி.எச்., பெற்றுக் கொள்வது என்பது எளிதான விஷயம்,'' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: