Tuesday, December 22, 2009

சொந்தமாக இரண்டு காரா? கூடுதல் வரி கட்டணும்

தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நகரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இப்பிரச்னை தொடர்பான வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து நெரிசலில் கார்களின் பங்கு 30 சதவீதம், இருசக்கர வாகனங்களின் பங்கு 62 சதவீதம் என கவலை தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் விகாஷ் பாவா, நீதிபதிகளிடம் தெரிவித்ததாவது;
டில்லியில் இருப்பவர்களில் பெரும்பான்மையானோர், ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்துள்ளனர். வாகன நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம். எனவே, வாகன பதிவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, சாலை வரி, பார்க்கிங் சார்ஜ் உள்பட பல வழிகளில் கூடுதல் வரி விதிப்பது பற்றி மாநில அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இவ்வாறு விகாஷ் பாவா தெரிவித்தார். இதையடுத்து இதற்கு தகுந்தவாறு ஒரு சட்டத்திருத்தம் கொண்ட வர மாநில அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினமலர்


No comments: