Thursday, December 17, 2009

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கிறது பாரதி ஏர்டெல்!

வங்கதேசத்தின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பாரதி ஏர்டெல். அபுதாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் வங்கதேச மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பாரதி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பாரதிக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி வங்கதேச தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.
கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பாரதி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை வங்கதேசத்தில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது. வாரிட் நிறுவனம் 2007ல் வங்கதேசத்தில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பாரதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, வங்கதேச தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் தற்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: