Monday, November 9, 2009

ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்

ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தி உள்ளது. சாப்ட்வேர் துறையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் மைக்ரோசாப்ட், தற்போது இந்தியாவில் ஆன்லைன் சாப்ட்வேர் சேவையை அறிமுகப் படுத்தி உள்ளது. இதற்கு மாத கட்டணம் ரூ. 100 முதல் ஆரம்பமாகிறது. இந்த சேவையை அதற்குரிய சாப்ட்வேரை கணினியில் ‌டவுன்லோடு செய்யாமலேயே, மைக்ரோசாப்ட் இணையத்தளத்தின் உதவியுடன் பெற்று கொள்ளலாம். இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப செலவில் 10 முதல் 50 சதவீதம் வரை சேமிக்கலாம். ஒவ்வொரு சேவைக்கும், அதன் சேவைக்கேற்ப குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தனி நபர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வசதிக்காக இந்த சேவை வழங்கப் படுகிறது. இமெயில் பரிமாற்றம், ஆபிஸ் ஷேர் பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆன்லைனில் வழங்க இந்த சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: