Monday, November 30, 2009

துபாய் பொருளாதார நெருக்கடி: அதிகளவு பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கருத்து

துபாய் பொருளாதார நெருக்கடியால் அதிகளவு பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். துபாய் அரசு நிறுவனமான துபாய் வோல்ட், 59 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதற்கு ஆறு மாத காலம் தவணை கேட்டதன் காரணமாக துபாய் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரெலியாக இந்திய பங்குச் சந்தையும் ஆட்டம் கண்டது. இந்நிலையில், துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவை பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தகவல் தெரிவித்தனர் . இதன் காரணமாக இன்றைய பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் தொடங்கியது. நேற்று ஐக்கிய அரபு குடியரசின் ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை, நிதி சந்தை, வங்கிகள் ஆகியவற்றின் பணப்புழக்கம் பாதிக்காத வகையில் அந்நாட்டு நாணயமான தினாரை வங்கித் துறையில் புழக்கத்திற்கு விடுவதாக அறிவித்தது. இந்நிலையில் எடில்விஸ் இன்ஸ்டிசனல் ஈக்விட்டிஸ் என்ற முதலீடு நிறுவனத்தின் துணை தலைவர் விகாஸ் கிமானி இதுகுறித்து கூறும் போது, இந்திய பொருளாதாரத்திற்கு துபாயில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும். துபாய் நிறுவன கடன் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். துபாய் வேர்ல்ட் நிறுவனத்தை பாதுகாக்க துபாய் அரசு முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு, நெருக்கடியில் உள்ள நிறுவனத்திற்கு உதவும் வகையில் உதவிக்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு நிலவுவதாக மற்றொரு நிபுணர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: