Monday, November 30, 2009

2வது காலாண்டுக்கான ஜி.டி.பி., 7.9 சதவீதமாக அதிகரிப்பு

இரண்டாவது காலாண்டு நிதியாண்டிற்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி., ) 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையிலும் ஏறுமுகம் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக தான் இருந்தது. முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6.2 ஆக இருந்தது. தற்போது யாரும் எதிர்பாராத நிலையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதத்தை எட்டியுள்ளது. சுரங்கத்துறை 9.5 சதவீத வளர்ச்சியும் , உற்பத்தித் துறை 9.2 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. முன்னதாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக தான் இருக்கும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
நன்றி ; தினமலர்


No comments: