Friday, November 13, 2009

பிரிட்டன் நிறுவனத்தை வாங்கியது டி.வி.எஸ்.,

பிரிட்டனின் மல்டிபார்ட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தை டி.வி.எஸ்., குழுமத்தின் அங்கமான டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனம், ஆட்​டோ​மொ​பைல் துறைக்​குத் தேவை​யான உதிரி பாகங்​க​ளைத் தயா​ரித்து அளிப்​ப​தில் முன்​ன​ணி​யில் விளங்​கு​கி​றது. ராணு​வம் மற்​றும் பிற துறை​க​ளுக்​கான உதி​ரி​பா​கங்​க​ளை​யும் இந்​நி​று​வ​னம் தயா​ரித்​த​ளிக்​கி​றது. ரூபாய் 475 கோடி வருவாய் பெற்று வரும் மல்டிபார்ட் ஹோல்டிங் நிறுவனத்தை வாங்குவதற்கு முக்கிய காரணம், டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக தரம் உயர்த்துவதற்கே என்று அந்நிறுவன தலைவர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்​நி​று​வ​னத்​தைக் கைய​கப்​ப​டுத்​தி​ய​தன் மூலம் விற்​பனை வரு​மா​னம் 2010-ம் ​ஆண்​டில் ரூ. 1,000 கோடி​யும் 2012-ல் ரூ. 2,000 கோடி​யும் ஈட்ட இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி :தினமலர்

No comments: