Sunday, November 1, 2009

புதிய குறியீடுகளுடன் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி ஆலோசனை

ரூபாய் நோட்டுகளிலுள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கூட, அப்படியே காப்பியடித்து அச்சுஅசலாக கள்ளநோட்டுகளை அச்சடித்து பரப்பி வருகிறது பாகிஸ்தான். இதனால், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுக்குரிய பாதுகாப்புக் குறியீடுகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் மீது வன்மத்துடன் இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவில் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவது, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அவ்வப்போது 100, 500,1,000 ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்புக் குறியீடுகளை நுணுக்கமாக மாற்றிக் கொண்டே வந்தாலும், மாற்றம் செய்யப் பட்ட குறியீடுகளை, நோட்டின் பேப்பர் உட்பட காப்பியடித்து பாகிஸ்தான் கள்ளநோட்டு

களைத் தயாரித்து விடுகிறது.ரூபாய் நோட்டின் உயர்தரத்தாள், அதிலுள்ள வெள்ளிக்கோடு அல்லது பச்சைக் கோடு, அலங்காரப் பூக்கள், காந்திஜி, எண்கள், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து, வாட்டர் மார்க் எனப்படும் வெற்றிடம் போன்றவை கள்ளநோட்டுகளிலும் அப்படியே இருக்கின்றன.கடந்த 1996ல் அச்சான நோட்டுகளின் சாயலில் கள்ளநோட்டுகள் வந்ததால், 2006ல் ரிசர்வ் வங்கி புதிய பாதுகாப்புக் குறியீடுகளை அறிமுகப்படுத்தியது.

500 ரூபாய் நோட்டிலுள்ள பச்சைக் கோடு; அந்தக் கோட்டில் அச்சாகியிருக்கும் 'பாரத் ஆர்.பி.ஐ.,' என்ற வார்த்தை; நோட்டின் குறுக்கு மறுக்காக ஓடும் கண்ணாடி நூலிழைகள்; நோட்டின் ஒரு பக்கத்தில் உள்ள மலர் அலங்காரங்களில் 500 என்று தெரிவது; நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு போன்றவை இந்தப் புதிய குறியீடுகளில் அடக்கம்.பாகிஸ்தானிலுள்ள குவெட்டா என்ற இடத்தில் அச்சாகி, நேபாளம் வழியாக உத்தரபிரதேச மாநிலத்துக்குள் இந்தக் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்தக் கள்ளநோட்டுகளில் மேலே சொல்லப்பட்ட புதிய பாதுகாப்புக் குறியீடுகள் அப்படியே இருந்தன. இது மத்திய

அரசைப் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி யிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் உ.பி.,யிலுள்ள 'கொண்டா' வாரணாசிக்கருகிலுள்ள 'மலாகியாபுல்' என்ற இடங்களில் கள்ளநோட்டுகளைக் கண்டுபிடித்துள் ளது. கடந்த 2002ல் ஐந்து கோடியே 57 லட்ச ரூபாய்; 2004ல் ஆறு கோடியே 81 லட்ச ரூபாய்; 2007ல் எட்டு கோடி ரூபாய்; 2008ல் 15 கோடி ரூபாய் என்று ஆண்டுக்கு ஆண்டு பிடிபடும் கள்ளநோட்டுகளின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது இந்திய அரசு நோட்டு தயாரிக்கும் உயர்தரத் தாள்களை இங்கிலாந்து,நெதர்லாந்து,ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஐந்து நாடுகளிலுள்ள ஆறு கம்பெனிகளிடம் வாங்கி வருகிறது.இந்தியாவிலுள்ள 'ஹொஷங்காபாத்' என்ற இடத்திலுள்ள நோட்டுத்தாள் தயாரிக்கும் கம்பெனி, 100,500,1,000 ரூபாய் நோட்டுக்களைத் தவிர்த்து பிற நோட்டுகளுக்கான தாள்களை மட்டும் தயாரித்து வருகிறது. இதன் உற்பத்தித் திறன் வெறும் இரண்டாயிரத்து 500 மெட்ரிக் டன் மட்டுமே. இதனால், பாதுகாப்பான உயர்தர தாள்களைத் தயாரிக்கும் 12 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய பேப்பர் மில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்த தகவல் களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது. உள்நாட்டிலேயே தரமான கரன்சி நோட்டு பேப்பர்களைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தப் புதிய மில் உருவாகி வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி தலைமையகம் ,'500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் எந்தெந்த பாதுகாப்புக் குறியீடுகளை கள்ளநோட்டுகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்பதைக்

கண்காணித்து வருகின்றோம். 'புதிய குறியீடுகள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை நடந்து வருகிறது. தேவைப்படும்போது அந்தக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.


கள்ளநோட்டுகளை கண்டுபிடிப்பது எப்படி?: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் 500 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் மேலிருந்து கீழாக பளபளக்கும் பச்சைக் கோடு ஒன்றிருக்கும். அதில் 'ஆர்.பி.ஐ.,' என்பது ஆங்கிலத்திலும், 'பாரத்' என்பது இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். பச்சைக் கோட்டினை வெளிச்சத்தில் பார்க்கும்போது நீல நிறத்தில் தெரியும். கள்ளநோட்டுகளில் பச்சைக் கோடு இருக்கும். ஆனால் அதில் 'ஆர்.பி.ஐ., பாரத்' என்று பொறிக்கப்பட்டிருக்காது. வெளிச்சத்தில் பார்க்கும் போது பச்சைக் கோடு பச்சையாகவே

தெரியும். வேறு நிறங்களுக்கு மாறாது.

No comments: