Thursday, November 26, 2009

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது

இந்திய பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் 344 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.64 புள்ளிகள் குறைந்து 17,141.31 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 28.95 புள்ளிகள் குறைந்து 5,079.20 புள்ளிகளோடு தொடங்கியது.
பெல் நிறுவன பங்குகள் 0.28 சதவீதமும், ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் 0.45 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகள் 0.57 சதவீதமும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்குகள் 0.39 சதவீதமும், ஐ.டி.சி., லிமிடெட் பங்குகள் 0.89 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.89 சதவீதமும், மகேந்திரா அன்ட் மகேந்திரா பங்குகள் 0.83 சதவீதமும் சரிவினை கண்டுள்ளன.
தொடர்ந்து சரிவினை கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை, யுரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட வீழ்ச்சி காரணமாக மேலும் சரிவினை காண தொடங்கியது. இன்று ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு காணப்பட்டது.
இந்திய பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.02 புள்ளிகள் சரிந்து 16,854.93 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 102.60 புள்ளிகள் சரிந்து 5005.55 புள்ளிகள் சரிவுடன் நிலைபெற்றது.
நன்றி : தினமலர்


No comments: