Saturday, November 7, 2009

இந்தியாவின் 15 முக்கிய நகரங்களில் வீடு விலை உயர்வு

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 15 பெரிய நகரங்களில் வீடு விலை கடந்த ஜூன் வரை 15 சதவீதம் உயர்ந்ததாக தேசிய வீட்டு வசதி வங்கி (என்எச்பி) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வீடுகளின் விலை ஏற்றத் தாழ்வு குறித்த புதிய அட்டவணையை என்எச்பி வெளியிடத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், பணவீக்கம் போல அதற்கு ரெசிடெக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கியின் விலை புள்ளிவிவரப் பிரிவு திரட்டிய தகவல்கள் அடிப்படையில், 2008ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை வீட்டு விலை ஏற்றத் தாழ்வு பற்றிய ரெசிடெக்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை உட்பட 15 பெரிய நகரங்களில் வீடு விலை 5 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் சில பகுதிகளில் 26 சதவீதம் வீட்டு விலை உயர்ந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வீடுகளின் விலை 27 சதவீத உயர்ந்தன. மும்பையில் 6 சதவீதமும், கோல்கத்தாவில் 13 சதவீதமும், டில்லியின் புறநகர் பகுதியான ஃபரிதாபாத்தில் குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 36 சதவீதம் அதிகரித்தது.
நன்றி : தினமலர்


No comments: