Sunday, September 6, 2009

குறைந்த விலை சிறிய கார்: போர்டு தயாரிக்கிறது

போர்டு மோட்டார் கம்பெனி, குறைந்த விலை சிறிய ரக கார் தயாரிப்பை துவக்கி உள்ளதாக, கம்பெனியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து, கம்பெனி மூத்த அதிகாரி கூறுகையில்,'இந்தியா, சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் தென்அமெரிக்கா போன்ற வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில், விற்பனை செய்வதற்காக, போர்டு மோட்டார் கம்பெனி, குறைந்த விலை சிறிய ரக கார் தயாரிப்பை துவக்கி உள்ளது. இந்த புதிய ரக கார், உலகின் பல்வேறு சந்தைகளையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த கார் தயாரிப்பு குறித்து போர்டு நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் மற் றும் ஆப்ரிக்கா பிரிவு நிர் வாக துணைத் தலைவர் ஜான் ஜி.பார்கர் கூறியதாவது: உலகளவில், குறிப்பாக ஆசியா-பசிபிக் பகுதிகளில் சிறிய கார் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியா, குறைந்த விலை கார் தயாரிப்பிற்கான தளமாக, உலகளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. போர்டு நிறுவனம் தயாரிக்கும், புதிய ரக சிறிய கார் வித்தியாசமானதாக இருக்கும். இதை, இந்தியாவில், அடுத் தாண்டு (2010) அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தியா பெரியளவிலான கார் சந்தை என்பதால், ஒரு விதமான காரை வைத்து, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது மற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது கடினம். எனவே, சிறிய ரக கார்களிலேயே, பல்வேறு விதமான கார்கள் தயாரிக்க, போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், சிறிய ரக கார் தயாரிப்பிற்காக, போர்டு நிறுவனம், 2,500 கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்துள்ளது. இவ்வாறு பார்கர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: