Tuesday, August 4, 2009

துறைமுக முன்னாள் தலைவர் வீட்டில் கிலோகணக்கில் தங்கம் : சி.பி.ஐ., விசாரணை தொடர்கிறது

சென்னை துறைமுக பொறுப்புக்கழக முன்னாள் தலைவர் சுரேஷ். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக இவர் மீது புகார் எழுந்ததையடுத்து. அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காலை முதல் நடந்து வரும் இந்த விசாரணைக்கு சுரேஷ் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்து 3 கிலோ தங்கம், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலர்கள் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை கைப்பற்றி, அதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினமலர்

1 comment:

வடுவூர் குமார் said...

என்ன இவ்வளவு தானா? :-)