Thursday, August 27, 2009

பெட்ரோல், டீசல் விலை உயராது

'சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை' என, பெட்ரோலியத் துறைச் செயலர் ஆர்.எஸ்.பாண்டே தெரிவித்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாண்டே கூறியதாவது: சர்வதேச அளவில், தற்போதைய எண்ணெய் விலைகள் சாதகமானதாக இல்லை. ஆனால், அதற்காக, எரிபொருள் விலையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, தற்போது பேரல் 3,750 ரூபாயாக(டாலர் மதிப்பில் 75) விற்கப்படுகிறது. இதனால், வாகன எரிபொருள் விற்பனை செய்யும் சில்லரை வியாபாரிகளுக்கு, அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாண்டே கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: