Monday, August 17, 2009

சர்க்கரை விலையேற்றம்சாக்லெட்டும் 'கசக்கும்'

சர்க்கரை விலை உயர்வு காரணமாக, சாக்லேட் உட்பட தின்பண்டங்கள் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஐ.டி.சி., உயர் அதிகாரி சித்ரன்ஜன் கூறுகையில், 'தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு சர்க்கரை தேவை 40 முதல் 50 சதவீதம் வரை உள்ளது. மொத்த உற்பத்தி செலவில், 20 சதவீத செலவு சர்க்கரை தான். பருவ மழை பாதிப்பால், சர்க்கரை விலையும் அதிகரித்துள்ளது. இதனால், சர்க்கரையில் தயாராகும் சாக்லெட் போன்ற உணவு தின்பண்டங்களும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம்' என்றார்.காட்பரீஸ் இண்டியா, கோத்ரேஜ் ஹெர்ஷேஸ் ஆகிய சாக்லெட் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் லாபச் சரிவை கண்காணித்து வருகின்றன. ஆனால், விலையை இன்னம் உயர்த்தவில்லை.சர்க்கரையின் விலை 25 சதவீத அளவிற்கு அதிகமாக உள்ளது. அதாவது ஒரு கிலோ சர்க்கரை 24 ரூபாயிலிருந்து தற்போது ரூபாய் 30 ஐத் தாண்டியுள்ளது.அமுல் நிறுவனத்தின் பொது மேலாளர் சவுதி கூறுகையில், சர்க்கரை விலையேற்றத்தால் ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் பால் பொருட்களின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் பாதித்துள்ளதாகவும், தற்போது உள்ள சூழ்நிலையைக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: