Monday, August 17, 2009

ஆசிய சந்தைகள் சரிவின் எதிரொலி : 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது சென்செக்ஸ்

இந்திய பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. காலை வர்த்தக துவக்கத்தின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் குறைந்து 15411.63 புள்ளிகளில் துவங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24 புள்ளிகள் குறைந்து 4580 புள்ளிகளில் துவ்ஙகியது. ஆசிய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு இந்திய பங்குச்சந்தையின் பங்குவர்த்தகத்திலும் எதிரொலித்தது. குறிப்பாக சீன பங்குச்சந்தையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு இன்று கடும் சரிவு ஏற்பட்டது. ஆசிய சந்தையின் சரிவு, கட்டுமான நிறுவன பங்குகளின் வீழ்ச்சி , கமோடிட்டீஸ் பங்குகளின் சுணக்கம் ஆகியனவற்றால் வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 626 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 14784 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டியும் 192 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 4387 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: