Tuesday, August 18, 2009

லட்சம் வாட்ச் விற்பனை: டைட்டன் பெரும் சாதனை

இந்தியாவின் முதன்மையான வாட்ச் நிறுவனமான டைட்டன், எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சென்ற மாதம் 23ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை, டைட்டன் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவித்துள்ளது.
டைட்டன் நிறுவனத்தின் ஐந்தாவது எக்ஸ்சேஞ்ச் ஆபரான இது, பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 20 லட்சம் மக்கள், டைட்டன் நிறுவனத்தின் எக்ஸ்சேஞ்ச் ஆபரால் பயனடைந்துள்ளனர்.
இந்தாண்டு எக்ஸ்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்ட, முதல் 15 நாட்களில், இரண்டு லட்சம் வாட்சுகள் விற்பனை ஆகி உள்ளன. சூரத், பரோடா, நாக்பூர், ஜாம்ஷெட்பூர், ராஞ்சி,ராய்பூர் மற்றும் புவனேஸ்வர் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும், டைட்டன் நிறுவன எக்ஸ்சேஞ்ச் ஆபர் பெரியளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் ஆபரில், 'நெபுலா-18 கேரட் சாலிட் கோல்ட் வாட்ச்' வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு, 'ஹெரிட்டேஜ் வாட்ச்' இலவசம் உட்பட பல சலுகைகள் வழங்கப்படு கின்றன.
நன்றி : தினமலர்


No comments: