Friday, August 21, 2009

ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையில் 50 சதவீதம் கட் : ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகையில் 50 சதவீதத்தை கட் செய்வதாக அறிவித்துள்ளது. டில்லியில் ஏர் இந்தியா போர்டு மீட்டிங் நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியாவின் நிலையை சமாளிக்கும் வகையில், ஊக்கத்தொகை வெட்டு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்த வெட்டின் மூலம், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அளிக்கும் வகையில் ஏர் இந்தியாவுக்கு சுமார் 675 கோடி ரூபாய் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் 31,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மொத்தம் 3000 கோடி ரூபாயாகும், இதில் ஊக்கத்தொகை மட்டும் 45 சதவீதமாகும். இந்த ஊக்கத்தொகை வெட்டு ஏர் இந்தியாவின் சீனியர் அலுவலர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின்படி ஏர்இந்தியா நிறுவனத்தின் சம்பள செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா போர்டு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


No comments: