Tuesday, July 14, 2009

புதிய விமானங்களை வாங்குவதை தள்ளி வைக்க ஏர் - இந்தியா முடிவு

ரூ.7,200 கோடி நஷ்டம் அடைந்து, கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் - இந்தியா நிறுவனத்தின் நிதி தேவையை பூர்த்தி செய்ய பங்குகளை விற்பது மற்றும் குறைந்த கால கடன் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அத்துடன் அது ஆர்டர் செய்திருக்கும் புது விமானங்களை இப்போது பெறாமல், பெறுவதை தள்ளி வைக்கவும் முடிவு செய்திருக்கிறது. ஏர் - இந்தியாவின் நிலை குறித்தும் அதனை காப்பாற்ற மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் இதனை தெரிவித்தார். புது விமானங்களுக்காக செய்திருக்கும் ஆர்டரை மாற்றி அமைப்பது, அல்லது ரத்து செய்வது, லாபம் வராத விமான வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதை குறைப்பது, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, ஊக்க தொகையை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரபுல் படேல் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்