Tuesday, July 14, 2009

ஏறியது பங்கு சந்தை

கடந்த வாரத்தில் 10 சதவீத புள்ளிகளை இழந்திருந்த மும்பை பங்கு சந்தை, இன்று இழந்த புள்ளிகளில் கொஞ்சத்தை மீட்டது. சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 135 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்திருந்தது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் இந்திய பங்கு சந்தையில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. எல்லா துறை பங்குகளும் இன்று நல்ல லாபத்தில் விலை போனது. மெட்டல், ரியால்டி, இன்ஃப்ராஸ்டிரக்சர், பேங்கிங் மற்றும் ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் அதிகம் விற்பனை ஆயின. ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் மட்டுமே இறங்கியிருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 453.38 புள்ளிகள் ( 3.38 சதவீதம் ) உயர்ந்து 13,853.70 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 137.35 புள்ளிகள் (3.46 சதவீதம்) உயர்ந்து 4,111.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. டிஎல்எஃப், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்டிரக்சர், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎப்சி, சுஸ்லான் எனர்ஜி, யூனிடெக் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் அதிகம் லாபம் பார்த்தன. அவைகள் 7 முதல் 11.5 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தன.
நன்றி : தினமலர்


No comments: