Friday, July 31, 2009

பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை : இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலையில் சென்செக்ஸ்

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் காரணமாக இன்று காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்படுகிறது. வர்த்தகம் துவங்கிய நிமிடத்தில் இருந்தே உயர்ந்திருந்த மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலை 10.40 மணி அளவில் 316.03 புள்ளிகள் உயர்ந்து 15,703.99 புள்ளிகளாக இருந்தது. இது, இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலை. அதே போல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 88 புள்ளிகள் உயர்ந்து 4,659.45 புள்ளிகளாக இருந்தது. அதிக அளவில் பங்குகளை வாங்கும் போக்கு காணப்படு வதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, ரியாலிட்டி, மெட்டல் மற்றும் இன்ஃராஸ்டிரக்சர் பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. தேசிய பங்கு சந்தையில் 660 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்திருந் தன.கெய்ர்ன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், சுஸ்லான்,டிஎல்எஃப், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரான்பாக்ஸி லேப்ஸ், ஹீரோ ஹோண்டா மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


2 comments:

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

அதற்கான முகவரி : www.findindia.net

பாரதி said...

thanks Ram