Friday, July 31, 2009

கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்தன

கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று திடீரென உயர்ந்தன. எதிர்பார்த்ததையும் மீறி அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதித்திருப்பதாக வந்த அறிக்கையை அடுத்து, அங்குள்ள முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் 83 புள்ளிகள் ( 0.9 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் இது தான் மிக உயர்ந்த நிலை. 2009 ல் இதுவரை இல்லாத உயர்ந்த நிலையும் இதுதான். எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம், கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் நேற்று 11 புள்ளிகள் ( 1.2 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. நாஸ்டாக் காம்போசைட் இன்டக்ஸ், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப்பின் 16 புள்ளிகள் ( 0.8 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது.
நன்றி :தினமலர்


No comments: