Thursday, July 16, 2009

கிராமங்களுக்காக 'ரிலையன்ஸ்' மொபைல்போன்

'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' தமிழக தலைமை செயல் அலுவலர் அஜய் அவஸ்தி கூறியதாவது: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கிராமங்களில் உள்ளனர். போதிய தொழில் நுட்பம், மொழியறிவு இல்லாததால் ஐ.வி.ஆர்.,- எஸ்.எம்.எஸ்., மற்றும் கால் சென்டர் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிராமங்களில் உலகத்தரமிக்க மொபைல்போன் சேவை பெற, மதுரை மண்டலத்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், திருப்புவனம், கமுதி, திருத் தங்கல், சாத்தூரில் 'கிராமப்புற வாடிக்கையாளர் சேவை மையங்'களை துவங்கியுள்ளோம். கிராமங் களில் 'டெலி- டென்ஸிட்டி' என்ற தொலைத் தொடர்பு வசதியை அதிகரிக்கும் நோக்கில் இசட்.டி.இ., ஹேண்ட் செட் 799, எல்.ஜி.,கலர் ஹேண்ட் செட் 1099 ரூபாய்க்கு இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்றார். மதுரை மண்டல மேலாளர் ஆன்டனிராஜ் உடனிருந்தார்.
நன்றி : தினமலர்


No comments: