Wednesday, July 1, 2009

பெட்ரோல் டீசல் விலை உயர்வு : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்வடைகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்து பேசினார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முரளி தியோரா பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், டீசல் விலை ரூ.2ம் உயர்த்துவதாக அறிவித்தார். இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: