Wednesday, July 1, 2009

எப்.எம். ரேடியோ, டீ.டி.எச். சேவைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்த பரிசீலனை

நாட்டில் எஃப்.எம். ரேடியோ மற்றும் தொலைக்காட்சி சேனல்களை நேரிடையாக வீடுகளுக்கு அளிக்கும் டீ.டி.எச். சேவை போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. தற்பொழுது, எஃப்.எம். ரேடியோ சேவையில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனத்தில், 20 சதவீத அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும். இந்த உச்சவரம்பை 24 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, டீ.டி.எச். சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஒன்றில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான உச்சவரம்பை தற்போதைய 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தவிர, இன்டர்நெட் சேவை துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கான அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பையும் உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: