Thursday, July 30, 2009

இந்தியன் ஆயில் கார்பரேஷனின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட ஒன்பது மடங்கு அதிகம்

ஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.3,682.83 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் பெற்றிருந்த நிகர லாபமான ரூ.415.13 கோடியை விட 9 மடங்கு அதிகம். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.89,148.57 கோடியாக இருந்த அதன் மொத்த வருவாய் இந்த வருடத்தில் ரூ.60,683.97 கோடியாக குறைந்திருக்கிறது. பாம்பே பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2009 மார்ச்சில் பொங்கைகான் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. எனவே கடந்த நிதி ஆண்டுடன் இந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது.
நன்றி : தினமலர்


No comments: