Thursday, July 30, 2009

ஏறியது பங்கு சந்தை

நிதி, டெக்னாலஜி, எஃப் எம் ஜி சி, சிமென்ட், பவர், மெட்டல் மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு மதிப்பு உயர்ந்திருந்ததால் இன்று பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்திருக்கிறது. நிப்டி மீண்டும் 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. இருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜின்டால் ஸ்டீல், சன் பார்மா, டாடா பவர், ஏபிபி, நால்கோ, மற்றும் சுஸ்லான் எனர்ஜி நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்ததால் சந்தை வளர்ச்சி தடைபட்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், எதிர்பார்த்ததையும் மீறி 42 சதவீதம் அதிகமாக வந்திருப்பதால் அதன் பங்கு மதிப்பு இன்று 4 சதவீதம் உயர்ந்திருந்தது. அதேபோல் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. கோடக் மகிந்திரா மற்றும் பேங்க் ஆப் பரோடா பங்கு மதிப்பு 0.7 சதவீதம் உயர்ந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 214.50 புள்ளிகள் ( 1.41 சதவீதம் ) உயர்ந்து 15,387.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 57.95 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) உயர்ந்து 4,571.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: