Saturday, July 25, 2009

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் விற்பனை ஆகிறது

ஜூன் 28ம் தேதி இந்தியாவின் விற்பனைக்கு வந்த டாடா மோட்டார்ஸின் சொகுசு கார்களான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர், நாள் ஒன்றுக்கு ஒரு கார் வீதம் விற்பனை ஆவதாக தெரிவித்திருக் கிறது. இந்த இரு மாடல்களிலும் இதுவரை 15 கார்களை, தெற்கு மும்பை வொர்லியில் இருக்கும் ஷோரூமிலும், 12 கார்களை தானேயில் இருக்கும் ஷோரூமிலும் விற்பனை செய்திருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும் லேண்ட்ரோவர் கார்கள் ஒவ்வொன்றும் ரூ.63 லட்சத்தில் இருந்து ரூ.89 லட்சம் வரை விலையில் இருக்கின்றன. ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சத்தில் இருந்து ரூ.92 லட்சம் வரை விலையில் இருக்கின்றன. எல்லாம் மும்பையில் எக்ஸ் - ஷோ ரூம் விலை. சந்தை நிபுணர்களின் எதிர்பார்ப்பையும் மீறி இவ்வளவு கார்கள் விற்பனை ஆகி இருப்பது டாடா மோட்டார்ஸூக்கு திருப்தி அளித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் இதுவரை மொத்தம் 27 சொகுசு கார்களை விற்பனை செய்திருக்கும் நிலையில், அதன் போட்டி நிறுவனமான ஜெர்மனியின் போர்சி, மாதத்திற்கு 10 முதல் 13 கார்களைத் தான் ( அதுவும் ரூ.65 லட்சத்திற்கு மேல் விலையில் இருப்பவை ) இங்கு விற்பனை செய்கிறது. ரூ.80 லட்சம் விலையில் இருக்கும் ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் இங்கு மாதத்திற்கு 10 க்கும் குறைவாகத்தான் விற்பனை ஆகிறது. ஆனால் பிஎம்டபிள்யூவின் 7 சீரியஸ் மற்றும் மெர்சிடஸ் பென்ஸின் எஸ் கிளாஸ் கார்கள் மாதத்திற்கு 30 முதல் 40 வரை இங்கு விற்பனை ஆகிறது.
நன்றி : தினமலர்


No comments: