Saturday, July 25, 2009

இந்தியாவின் ஒருங்கிணைந்த அடையாள அட்டை திட்டத்தில் சேர மைக்ரோசாப்ட் விருப்பம்

இந்திய அரசாங்கம், குடிமக்கள் எல்லோருக்கும் வழங்க இருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை திட்டத்தில் சேர உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் சேர விரும்புவதாக, அதன் சேர்மன் பில்கேட்ஸ் தெரிவித்திருக்கிறார். புதுடில்லியில் நாஸ்காம் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் கோ - சேர்மனாக இருந்து இப்போது ஒருங்கிணைந்த இந்திய அடையாள அட்டை திட்ட ஆணையத்தின் ( யூஐடிஏஐ ) தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நிலேகனியையும் நேற்று பில்கேட்ஸ் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினார். நந்தன் நிலேகன் நேற்றுதான் அந்த திட்டத்தில் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். முதல் கட்டமாக இன்னும் 12 - 18 மாதங்களுக்குள் முதல் கட்டமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு விடும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்திய அரசு குடிமக்களுக்கு பயோமெட்ரிக் கார்டை வழங்கப்போவதில்லை என்றும், அது சேகரித்து அட்டையில் பதிவு செய்து வைக்கும் டேடாபேஸ் மூலமாக, அரசு அதிகாரிகளால் அந்த நபரை பற்றியமுழு விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: