Saturday, July 4, 2009

ரயில்வேயின் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் வேலை தொடர்பாக நிபுணர் குழு அமைப்பு

இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் பணிக்காக, இந்தியா முழுவதும் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்காணித்து, ஆதை மேம்படுத்த ஆலோசனை சொல்ல,மற்றும் திட்டங்கள் தீட்ட, ஒரு நிபுணர் குழு அமைக்கப் படுகிறது. அந்த குழு, இந்தியாவின் டெலிகாம் துறையில் புரட்சியை ஏற்படுத்திய சாம் பிட்ரோடாவை தலைவராக கொண்டு செயல்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். இந்த குழு, ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கில் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்றும், இதன் மூலம் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கும் தகவல் தொழில் நுட்பத்தை எப்படி கொண்டு செல்லலாம் என்றும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் என்று மம்தா தெரிவித்தார். ரயில்வேயில் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் பணியை ஏற்கனவே ரெயில்நெட் என்ற நிறுவனம் ஏற்று செய்து வருகிறது. இந்த நிறுவனம் தான் இந்திய டெலிகாம் துறையில் இருந்து அதற்கு தேவையான உரிமத்தை பெற்றிருக் கிறது. ஏற்கனவே ரயில் பாதைகளில் சுமார் 30,000 கி.மீ.தூரத்திற்கு அது ஆப்டிக்கல் ஃபைபர் கேபிளை அமைத்தும் இருக்கிறது. அதனை விரையில் 40,000 கி.மீ.தூரத்திற்கு விரிவு படுத்தவும் அது முடிவு செய்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: