Wednesday, June 17, 2009

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த வருடம் அடைய இருக்கும் வருமான இழப்பு ரூ.38,700 கோடி

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால், இந்த வருட வருமானத்தில் ரூ.38,700 கோடியை இழப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களுமே ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையின் போதும் ரூ.2.96 ஐ இழக்கிறார்கள் என்கின்றனர் அதிகாரிகள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 70 டாலர் வரை உயர்ந்து விட்டதால், ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையின் போதும் ஆகிக்கொண்டிருந்த ரூ.3.68 நஷ்டம், இப்போது ரூ.6.08 ஆக உயர்ந்து விட்டது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி.மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையால் நாள் ஒன்றுக்கு ரூ.135 கோடி நஷ்டம் அடைந்து வருகின்றன.
நன்றி : தினமலர்


No comments: