Tuesday, April 7, 2009

வட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள்

இந்தியாவின் பணவீக்கம் ஜீரோ சதவீதத்தை ஒட்டியே இருந்து வருவதால், வங்கிகள், வட்டியை மேலும் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைம்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு செமினாரில் கலந்து கொண்டு பேசிய சுப்பாராவ், ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. நிதி கொள்கையையும் எளிதாக்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த அக்டோபரில் இருந்து பல தடவைகள் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் கடந்த காலத்தில் வட்டியை குறைத்திருக்கின்றன. இருந்தாலும் அவைகள் மேலும் வட்டியை குறைக்கலாம் என்றார் சுப்பாராவ். வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 3.5 சதவீதம் வரையிலும் குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: