Friday, April 17, 2009

ஐசிஐசிஐ பேங்கில் இருந்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க், கூடிய விரைவில், அதன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் கடும் ஆட்டத்தை காண இருக்கிறது என்கிறார்கள். அதன் முக்கிய இரு துறைகளின் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற இருக்கிறார்கள் என்கிறார்கள். ஐசிஐசிஐ பேங்க்கின் பிரைவேட் ஈக்வட்டி துறை தலைவராக இருக்கும் ரேணுகா ராம்நாத் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் துறையின் தலைவராக இருக்கும் ஷிகா ஷர்மா ஆகியோர் விரைவில் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். ஏப்ரல் 20 ம் தேதி நடக்க இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் போர்டு மீட்டிங்கில் ரேணுகா ராம்நாத், ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிஐசிஐ பேங்கின் சி.இ.ஓ. மற்றும் மேலாண் இயக்குனராக, மே ஒன்றாம் தேதி சந்தா கோச்சர் பதவியேற்றதையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கே.வி.காமத்திற்கு பதிலாக சந்தா கோச்சர் தான் அடுத்த சி.இ.ஓ.மற்றும் மேலாண் இயக்குனரா நியமிக்கப்படுவார் என்று கடந்த டிசம்பர் 2008ல் அறிவிக்கப்பட்டபோதே பல உயர் அதிகாரிகள் பதவி விலகுவார்கள் என்று சொல்லப்பட்டது.
நன்றி ; தினமலர்


No comments: