Friday, April 17, 2009

லேசான முன்னேற்றத்துடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய வர்த்தகத்தின் போது 3 சதவீதம் வரை உயர்ந்திருந்த பங்கு சந்தை, பின்னர் வர்த்தக முடிவில் லேசான ஏற்றத்துடன் முடிந்து விட்டது. பகல் நேர வர்த்தகத்தின் போது, பேங்கிங், கேப்பிட்டல் குட்ஸ், பிரைவேட் பவர் கம்பெனிகள், ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ், பார்தி ஏர்டெல், யூனிடெக் ஆகிய நிறுவன பங்குகள் உயர்ந்திருந்த தால் சந்தை மேலே சென்றது. இருந்தாலும் மெட்டல், ஆட்டோ, பார்மா, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என்.டி.பி.சி., ஐ.டி.சி, டி.எல்.எப்., விப்ரோ, ஏ.சி.சி.,ஆகிய நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் உயர்ந்திருந்த புள்ளிகள் இறங்கி விட்டன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 11,339.47 புள்ளிகள் வரை ( 2.8 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 75.69 புள்ளிகள் ( 0.69 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 11,023.09 புள்ளிகளில் முடிந்து விட்டது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் பகல் நேர வர்த்தகத்தின் போது நிப்டி 3,489.85 புள்ளிகள் வரை ( 3.02 சதவீதம் ) சென்று, பின்னர் வர்த்தக முடிவில் 14.90 புள்ளிகள் ( 0.44 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 3,384.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: