Monday, April 20, 2009

ஒபாமாவுக்கு பரிசளித்ததால் விற்பனையில் இரண்டாம் இடத்தை பிடித்த புத்தகம்

டிரினிடாட் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ' சம்மிட் ஆஃப் த அமெரிக்காஸ் 'மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வெனிசுலா அதிபர் ஒரு புத்தகத்தை பரிசளித்தார். உருகுவே நாட்டு எழுத்தாளர் எட்வர்டோ கேலியானோ, ஸ்பானிஷ் மொழியில் எழுதிய ' த ஓப்பன் வெய்ன்ஸ் ஆஃப் லத்தீன் அமெரிக்கா ' என்ற அந்த புத்தகம், இதுவரை விற்பனையில் 54,295 வது இடத்தில்தான் இருந்தது. ஒபாமாவுக்கு அந்த புத்தகம் பரிசளிக்கப்பட்டபின் அது, இப்போது அதிகம் விற்பனை யாகும் புத்தக லிஸ்ட்டில் இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. கடந்த ஐநூறு ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்கா வில் மற்ற நாடுகளின் தலையீடு எந்த அளவுக்கு இருந்து வருகிறது என்றும், அதனால் ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்துமே அந்த புத்தகத்தில் எட்வர்டோ எழுதியிருந்தார். மாநாடு நடந்து கொண்டிருந்த போதே திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த வெனிசுலா அதிபர் சாவஸ், நேராக ஒபாமா இருப்பிடம் சென்று, அதை அவரிடம் கொடுத்துவிட்டு கை குழுக்கினார். அந்த புத்தகத்தில் ' மிக்க அன்புடன், ஒபாமாவுக்கு ' என்று சாவஸ் எழுதியிருந்தார்.
நன்றி : தினமலர்


No comments: