Monday, April 20, 2009

சத்யம் பங்குகளை வாங்குவதற்காக பத்திரங்கள் மூலம் ரூ.600 கோடி திரட்டிய டெக் மகேந்திரா

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை வாங்க முன்வந்திருக்கும் டெக் மகேந்திரா நிறுவனம், அதற்கான பணம் ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு தேவையான பணத்திற்காக, ரூ.600 கோடியை, பத்திரங்களை விற்று திரட்டி இருக்கிறது. ஏப்ரல் 17ம் தேதி, ரூ.10 லட்சம் முக மதிப்புள்ள, 6,000 நான் கன்வெர்டிபிள் ( மாற்ற முடியாத ) டிபஞ்சர்களை ( என்சிடி )டெக் மகேந்திரா வெளியிட்டு இந்த பணம் திரட்டப்பட்டதாக மும்பை பங்கு சந்தைக்கு அது அளித்த அறிக்கையில் தெரிவித்திருக் கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 31 சதவீத பங்குகளை விற்க அந்த நிறுவனத்தின் போர்டு முடிவு செய்து ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்தபோது, டெக் மகேந்திராவின் இன்னொரு நிறுவனமான வெஞ்சர்பே கன்சல்டன்ட்ஸ் அளித்த விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சத்யத்தின் பங்குகளை பங்கு ஒன்றை ரூ.58 விலையில் வாங்கிக்கொள்வதாக வெஞ்சர்பே சொல்லியிருந்ததால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 31 சதவீத பங்குகளுக்கான தொகை ரூ.1,756 கோடியை வரும் 21ம் தேதிக்குள் செலுத்துமாறு இந்திய கம்பெனி சட்ட வாரியம் தெரிவித்திருந்ததை அடுத்து அதற்கு தேவையான பணத்தை திரட்ட டெக் மகேந்திரா தீவிரமாக முடிவு செய்தது
நன்றி : தினமலர்


No comments: