Tuesday, April 21, 2009

முன்கூட்டியே டிக்கெட் வாங்கினால் குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் : ஏர் இந்தியா அறிமுகம்

ஏர் இந்தியா விமானங்களின் பயணம் செய்யும் பயணிகள், அதற்கான டிக்கெட்டை முன்கூட்டியே வாங்கினால் குறைந்த கட்டணம்தான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். உள்நாட்டு விமான சேவையில் குறிப்பிட்ட 35 இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சலுகை ஏப்ரல் 17 ம் தேதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அட்வான்ஸ் பர்சேஸ் எக்ஸ்கர்சன் ஃபேர்ஸ் ( அபெக்ஸ் ) என்ற இந்த திட்டப்படி, சென்னையில் இருந்து மதுரை அல்லது ஐதராபாத் அல்லது விசாகப்பட்டணம் அல்லது பெங்களுர் செல்ல விரும்பும் பயணிகள், 10 நாட்களுக்கு முன்பே அதற்கான டிக்கெட்டை வாங்கி விட்டால் ரூ.2,694 தான் கட்டணம். அதையே 20 நாட்களுக்கு முன்பு வாங்கினால் ரூ.2,494 தான் கட்டணம். இதில் பேசிக் ஃபேர், பேசஞ்சர் சர்வீஸ் ஃபீ, மற்றும் பியூயல் சர் சார்ஞ் ஆகியவை அடங்கி விடும். ஆனால் சில விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் யூசர் டெவலப்மென்ட் ஃபீ மட்டும் கட்டவேண்டியிருக்கும். மேலும் இந்த திட்டத்தில் வாங்கப்படும் டிக்கெட்களை கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெற முடியாது. கோடை காலத்திற்காக ஏற்கனவே ஏர் இந்தியா அறிமுகப்படுத்திய, 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் எடுத்தால் குறைந்த கட்டணம் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த திட்டமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: