Tuesday, April 21, 2009

ஆக்ஸிஸ் பேங்க் சேர்மன் ராஜினாமா : ஷிகா சர்மாவை எம்.டி.யாக நியமித்ததற்கு எதிர்ப்பு

ஆக்ஸிஸ் பேங்க்கின் அடுத்த மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.வாக ஷிகா சர்மாவை போர்டு நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சேர்மன் பி.ஜே.நாயக் ராஜினாமா செய்திருக்கிறார். நேற்று சுமார் 7 மணி நேரம் நடந்த ஆக்ஸிஸ் பேங்கின் போட்டு மீட்டிங்கில், அடுத்த மேலாண் இயக்குனராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சுவந்தபோது, அதன் நியமன கமிட்டி ஷிகா சர்மாவின் பெயரை சொன்னது. ஆனால் அதற்கு நாயக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது, அதில் நாயக் மட்டுமே ஷிகா சர்மாவுக்கு எதிராக ஓட்டளித்திருந்தார். மற்ற 8 உறுப்பினர்களும் ஷிகாவுக்கு ஆதரவாக ஓட்டளித்திருந்தனர். மேலும் அந்த பதவிக்கு நாயக் சிபாரிசு செய்த ஹேமந்த் கவுல் ஐ விட, ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இல் எம்.டி.மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்து நல்ல அனுபவம் பெற்றிருக்கும் ஷிகா சர்மாதான் பொருத்தமானவர் என்று போர்டு கருதியது. ஹேமந்த் கவுர், ஆக்ஸிஸ் பேங்க்கின் ரீடெய்ல் நடவடிக்கைகளுக்கு எக்ஸிகூடிவ் டைரக்டர் பொறுப்பாக இருப்பவர்.

நன்றி : தினமலர்



No comments: