Tuesday, April 14, 2009

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி நூறு கோடி டாலரை தாண்டியது

இந்தியாவின் மருந்து ஏற்றுமதி, கடந்த டிசம்பர் மாதத்தில் நூறு கோடி டாலரை தாண்டியிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் 1.01 பில்லியன் டாலர் ( சுமார் 4,950 கோடி ரூபாய் ) மதிப்புள்ள மருந்துகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த அளவுக்கு மருந்து ஏற்றுமதி ஆகி இருப்பது டிசம்பர் மாதத்தில் தான். இதுவே, 2007 டிசம்பரில் 60.9 லட்சம் டாலருக்கு தான் நடந்திருந்தது. அதிலிருந்து 46.3 சதவீதம் உயர்ந்து இப்போது அது 101 கோடி டாலருக்கு நடந்திருக்கிறது. 2008 - 09 நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 21 சதவீதம் அதிகரித்து 8.44 பில்லியன் டாலருக்கு நடந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வருடத்தில் 6.97 பில்லியன் டாலருக்கு தான் நடந்திருந்தது. பார்மாசூடக்கல்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினமலர்



No comments: