Friday, April 3, 2009

மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது நானோ

டாடா கார் ஷோரூம்களில், நானோ காரின் விற்பனைக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை நானோ கார் புக்கிங் நடைபெறும். டாடா நானோ கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ய விண்ணப்பப் படிவங்கள், நாடு முழுவதும் உள்ள ஆயிரம் நகரங்களில், 30 ஆயிரம் இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள கன்கார்டு ஷோரூம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள வி.எஸ்.டி., ஷோரூம்களில் புக்கிங் செய்வதற்கு வசதியாக விண்ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன. வரும் 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை புக்கிங் நடைபெறும். புக்கிங் செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஜூலை மாதம் முதல் கார்கள் டெலிவரி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஒரு லட்சம் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. சென்னையில் ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நானோ சி.எக்ஸ்.பி.எஸ். 3 என்ற மாடல் கார் விலை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்.
நானோ பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய். நானோ எல்.எக்ஸ்.பி.எஸ். 3 கார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காருக்கு 18 மாதம் அல்லது 24 ஆயிரம் கி.மீ., வரை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.6 கி.மீ., தூரம் கார் பயணிக்க வல்லது. அதிகபட்சமாக 105 கி.மீ., வேகத்தில் செல்ல முடியும். புதிய 2 சிலிண்டர் சக்தி வாய்ந்தது. 624 சி.சி., திறன் கொண்ட அலுமினியம் எம்.பி.எப்.ஐ., பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் நீளத்தில் இன்ஜின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. வீல்கள் மூலைக்கு தள்ளப்பட்டு, ரூப் உயர்த்தப்பட்டுள்ளது. சிறிய கார்களை விட 21 சதவீதம் அதிக இடவசதியளிக்கும் படி நன்கு அகலமாக திகழ்கிறது. நானோ கார் புக்கிங் செய்ய முதல் விண்ணப்பத்தை சாயாதேவி பூர்த்தி செய்து கொடுத்து நிருபர்களிடம் கூறுகையில், ''நடுத்தர மக்களிடம் இந்த கார் நல்ல வரவேற்பு பெறும். மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் இந்த காரை சென்னை நகரில் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: